Your Ad here ...



Product ...

Services ...

Other things ...

<$BlogDateHeaderDate$>
மாடு மேய்க்க............

சரியான வார்த்தைதான்.ரொம்ப ரொம்ப அலட்டிக் கொள்ளும் தேர்தல் ஆணையம் இதை உருப்படியாக செய்யலாம்.

தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஓட்டு போட அனுமதிக்கும் ஆணையம், முதலில் விண்ணப்பித்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி இருக்க வேண்டும்.அங்கேயே இமாலய சறுக்கல்.ஒவ்வொருவரும் ஓட்டுப் போட அறிவுறுத்தும் போது , அடையாள அட்டை யார் கொடுப்பாங்க?

ஐந்து வருடம் வெட்டியாக சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டு திரியும் ஆணைய அதிகாரிகள் இதைக் கூட செய்ய முடியாமல் என்ன கிழிக்கிறார்கள்?பெயரைச் சேர்க்க போனால்,அங்கு அலட்டல் அதை விட.

உண்மையாக ஒரு முகவரியில் இருந்து கொண்டு அடையாள அட்டை கேட்டால் ஆயிரம் கேள்விகள்.கட்சிக்காரன் என சொல்லிக்கொண்டு லட்சக் கணக்கில் சேர்க்கச் சொன்னால் உடனே சேர்க்கும் தாய் உள்ளம்.அவ்வளவு சரி பார்ப்பையும் உடனே செய்து விட்டார்களாம்.நமக்குதான் ஒரு வருடம் ஆகும்.

காந்திய வழி தன் வழி என சொல்லும் அதிகாரிக்கு கடைசி காலத்தில் எத்தனைக் கண்டு பயம் வந்தது எனத் தெரியவில்லை.ஒரு அதிகாரியின் பொறுப்பான பேட்டி போலவா இருக்கிறது?நான் ஒட்டு போடவில்லை.....தவறுகள் நடந்திருக்கலாம்..........என்னால் ஒன்றும் செய்ய முடியாது..................அப்படியானால் தேர்தலுக்கு முன் அவ்வளவு வீராப்பு ஏன் தலைவா? காந்தி அப்படித்தான் சொன்னாரா?

வெட்கங்கெட்ட தேர்தல் ஆணையம்.சேஷன் சேஷன் என்று ஒரு மானஸ்தன் இருந்தான்...!இப்போ தேடினாலும் கிடைக்க மாட்டான்....!






தங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர் பார்க்கிறேன்
2 Comments:

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

April 14, 2010 at 7:30 AM  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

April 14, 2010 at 7:31 AM  

Post a Comment

<< Home